tamilnadu

img

சின்னக் குழந்தைகளின் சிறகை முறிக்க முயற்சி! -ஜோ.ராஜ்மோகன்

பள்ளியும்-தேர்வும் குழந்தைக ளுக்கு மீண்டும், மீண்டும் கற்பிக்கும் ஒரே பாடம் எங்க ளுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதுதான். குறிப்பாக தேர்வுகள் இந்த விசயத்தை வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன. எது சரி? எது தவறு? என்று அறிய குழந்தைகள் நம்மை சார்ந்து இருக்கிறார்கள் என்று தேர்வுகள் அவர்க ளிடம் சொல்கிறது என்கிறார் புகழ்பெற்ற கல்வியாளர் ஜான் ஹோல்ட்.

குழந்தைகளை மூன்று வயதிலேயே முறைசார் பள்ளி அமைப்புக்குள் கொண்டு வருவதை கஸ்தூரிரங்கன் தலைமையி லான புதியக் கல்விக்குழு தனது வரைவு அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.  மேலும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி 6 வயதுக்கு முன்னரே 85 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சியடைந்து விடுவதாக வும் எனவே மூன்று மொழிகளை கற்பிக்க வும் அறிவாற்றலை மற்றும் உணர்வுகளை தூண்டவும் இது பொருத்தமான பருவம் என எவ்வித அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மூலமும் நிரூபணமாகாத ஒன்றை உலக ளாவிய ஆய்வுகள் கூறுவதாக பொதுமைப் படுத்தியுள்ளது. ஆரம்பகால குழந்தை பராமரிப்பும் கல்வியும் (ECCE- Early Childhood Care and Education) என்ற திட்டத்தை முன்மொழிந்துள்ளது. குழந்தை கள் ஆரம்பக்கல்வி துவங்கும் முன்னரே பின் தங்கிய கற்றலை கொண்டுள்ளனர். எனவே பள்ளிக்காலம் முடியும் வரை பின் தங்கி விடுகின்றனர். எனவே, இத்திட்டத்தின் கீழ் 3 வயதிலிருந்தே குழந்தைகள் முறை சார் கல்வியமைப்புக்குள் கொண்டு வருவது குறித்து அறிக்கை கூறுகிறது.

புதுதில்லி அம்பேத்கர் பல்கலைக்கழ கம் நடத்திய ஆய்வில் பொது அல்லது தனி யார் பள்ளிகளில் முன்பருவக் கல்வியை முடித்த குழந்தைகள் தொடக்கப் பள்ளிக் குச் செல்லும் போது அதற்கான தயார் நிலைத் திறன்களை கொண்டிருக்க வில்லை என்றும் வரைவு அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது முரண்பாடாகவும் உள்ளது. பெரும்பாலான நாடுகளில் 6 வயதிலிருந்து தான் தொடக்கக்கல்வி கொடுக்கப்படு கிறது. முன்பருவக் கல்வி என்பதும் கற்றல் திணிப்புகள் அல்லாமல், தேர்வுகள் அல்லாமல், இயல்பான மகிழ்ச்சியான கற்றலைக் கொண்டு இருக்கின்றன. முறை சார் கல்வி அமைப்புக்குள் கொண்டு வந்து குழந்தைகளின் சிறகுகளை முறிக்கக் கூடாது. ECCE என்ற இந்தத் திட்டம் குழந்தைகளின் மீது ஏவப்படும் வன் முறையே அன்றி வேறல்ல.

வடிகட்டப்படும் அமைப்புமுறை

வகுப்புக்குரிய கற்றல் அடைவுகள், தேர்வுகள், தேர்வுகள், தேர்வுகள் என்று புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை அலறுகிறது.  பிரிகேஜி முதல் 1 மற்றும் 2ஆம் வகுப்புகளிலும் தேர்வுகள் கட்டா யம் நடத்தப்படும். இங்கிருந்தே மாணவர் கள் தரம்பிரிப்பு துவங்குகிறது.  கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 6 முதல் 14 வயது வரை அதாவது எட்டாம் வகுப்பு வரை தேர்வுகளே கூடாது என சட்டமாக்கியது. இது அனைத்து கல்வியாளர்களாலும் வரவேற் கப்பட்ட ஒன்று. ஆனால் கல்வி உரிமைச் சட்டத்திற்கு முற்றிலும் முரணாக இந்த அறிக்கை தேர்வு முறையை மொழிந்துள்ளது. மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு ஆகியவற்றிற்கு மத்திய தேர்வு வாரியத்தின் மூலம் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும், ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை எட்டு செமஸ்டர்களாக பிரித்து 40 தாள்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். 

பள்ளிக்கல்வி முடிந்த பின் உயர்கல்வி செல்வதற்கு தேசிய தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னரே கலை அறிவியல் உள்ளிட்ட எந்த கல்விக்கும் செல்ல முடியும் என்று புதிய கல்விக் கொள்கை கூறியுள்ளது. 

கற்றலைக் கொல்லும் தேர்வுகள்

தேர்வுகள் கற்றலைக் கொல்கின்றன. நீ புரிந்து கொள்வதற்காகப் படிப்பதில்லை. ஆனால் மதிப்பெண், பரிசு, வேலை என்று உனக்குத் தேவையான ஏதோவொன்றைப் பெறுவதற்காகத்தான் படிக்கின்றாய் என்று தேர்வுகள் குழந்தைகளிடம் சொல் கின்றன. பள்ளிச்சூழலில் உனக்கு என்ன தெரியும் என்பது முக்கியம் அல்ல. அதிகா ரத்தில் உள்ளவர்கள் உனக்கு என்ன தெரி யும் என்று நம்புகிறார்கள் என்பதுதான் முக்கியம். நன்கு சிந்தித்து மெதுவாக கற்கும் மாணவர்களை, நமது தேர்வு முறையும் கல்வியமைப்பும் தண்டிக்கிறது. தேர்வுக ளுக்கான விடைகளை அளிக்க குறுக்கு வழிகளையும் தேர்விற்குத் தேவையான தந்திரங்களையும் யார் கற்றுக்கொள்கி றார்களோ அவர்களைத்தான் சிறந்த மாணவர்கள் என்று தேர்வுகள் தேர்ந்தெ டுக்கின்றன. தேர்வுகள் குழந்தைகளின் தன்னம்பிக் கையையும் ஆர்வத்தையும் கொல்கின் றன. நிறைய குழந்தைகள் தங்களால் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் தான் வாழ்க்கை யைத் தொடங்குகின்றனர். ஆனால் சில வருட பள்ளி அனுபவம் அவர்களை பெரும் பாலானவற்றை கற்றுக்கொள்ளத் தகுதி யற்றவர்கள் என்றுதான் சொல்கிறது. குழந்தைகள் கணக்கு வராது. ஆங்கிலம் வராது, அறிவியல் வராது என்று கற்றுக் கொள்கின்றனர். இதை சமாளிக்க முடிந்த சில குழந்தைகள் தவிர மற்ற அனை வரும் தாங்கள் கற்றுக்கொள்ள இயலாத வர்கள் என்று நம்புகின்றனர். 

பயம்... பயம்... பயம்..

இந்த தோல்வியினால் ஏற்படும் பயம் அவர்களை பலவீனமாக்குகிறது. எதற்கு வம்பு எனக்குத் தெரிந்ததை மட்டும் செய்கி றேன். புதிய விசயங்கள் எல்லாம் தனக்கு வேண்டாம் என்று நினைக்க வைக்கிறது. தேர்வுகள் பாடங்களின் மீது மாணவர்க ளுக்குப் பயத்தை உருவாக்குகின்றன; தேர்வுகளை பற்றிய கவலையை உரு வாக்குகின்றன. அவர்களது பயம் அவர்களுக்கு தெரிந்ததைக் கூட சொல்ல முடியாமல் தடுக்கிறது. ஒவ்வொரு தோல்வியும் அவர்களை மேலும் மேலும் பயப்பட வைக்கிறது. சில மாணவர்கள் இப்படியும் யோசிக்கின்றனர். நான் இந்த முறை சுமாராக செய்தால் அடுத்த முறையும் பாஸாக வேண்டும் என்று எல்லோரும் எதிர் பார்ப்பார்கள். அடுத்த முறை ஃபெயில் ஆகி விட்டேன் என்றால் என்ன செய்வது? மிகவும் பயமாக இருக்கிறது. அதற்கு பதி லாக இந்த முறையே தேர்வை மோசமாக எழுதி தோல்வியடைவதே நல்லது என்று மாணவர்களை நினைக்க வைக்கிறது.  இந்த தேர்வு முறை குழந்தைகளுக்கு மன அழுத்தத்தையும் பயத்தையும் உரு வாக்கி பள்ளி அமைப்பிலிருந்து வெளி யேற்றுகிறது. இதனால்தான் உயர்கல்வி க்கு செல்லும் மாணவர்களின் விகிதம் 24 சதவீதத்தைத் தாண்ட முடியவில்லை. இந்த  புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தால் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய சரிவு ஏற்படும். கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செய்துள்ள இந்த பள்ளி அமைப்பும் தேர்வு முறையும் மிகச்சிறந்த வடிகட்டல் முறை யைக் கொண்டு குலத்தொழில்களை நோக்கி அனுப்புவதற்கான திட்டத்தையும் கொண்டிருக்கிறது.

தரம் பிரிக்கும் தேர்வுமுறை

தேர்வுகள் மாணவர்களிடம் ஏற்றத்தாழ் வையும் போட்டியையும் உருவாக்குகின்றன. தொடக்கத்திலேயே குழந்தைகள் திறமை யான மற்றும் திறமையற்ற மாணவர்க ளாகப் பிரிக்கப்படுகின்றனர். திறமையற்ற மாணவர்கள் தாங்கள் தோற்பவர்கள் என்று கற்றுக்கொள்கின்ற னர். திறமையான மாணவர்கள் எப்போதும் தனது மதிப்பெண்களையும் தரத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். வசதியுள்ள பல தனியார் பள்ளிக்கூடங் கள் இன்று கல்வித் தொழிற்சாலைகளாக திகழ்கின்றன. அவை தேர்வை நன்றாக செய்யக்கூடிய குழந்தைகளை உற்பத்தி செய்கின்றன. இந்த பள்ளிகளின் முக்கிய நோக்கம் பள்ளியின் புகழும் - வியாபார மும் தான்; குழந்தைகளல்ல. இந்தப் பள்ளி களில் குழந்தைகள் நன்றாக கற்றுக்கொண் டால் மட்டும் போதாது. குழந்தைகள் போட்டி யிட்டு வெற்றி பெறுபவர்களாகவும் மேலும் எல்லோரையும் விட சிறந்து விளங்குபவர்க ளாகவும் இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

இத்தகைய பள்ளியில் படிக்கும் குழந்தைகள் 7 மணி நேரத்தை பள்ளியி லும் 4 மணி நேரத்தை டியூசனிலும் (தனிப் பயிற்சி மையங்களிலும்) 2 மணி நேரத்தை வீட்டிலும் என மொத்தத்தில் நாள் ஒன்றுக்கு 13 மணி நேரம் படிப்பிற்காகச் செலவிடுகிறார்கள். ஆசிரியர்களும் பெற் றோர்களும் கூட இந்த போட்டிச் சூழலுக்குள் இழுக்கப்பட்டு பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இந்த திணிக்கப்படும் தேர்வுகள் தனிப்பயிற்சி நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே பயன்படும். கஸ்தூரி ரங்கன் குழு இந்தத் தேர்வு முறையை மேலும் கூர்மைப்படுத்தியுள் ளது. இந்த சூழலில் இந்திய சமூகத்தில் முன்னேறிய மற்றும் பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்கள், மட்டுமே எந்த உச்சத் தையும் எட்டிப்பிடிக்க முடியும். எனவே பல்வேறு சமூக ஏற்றத்தாழ்வுகளை கொண்ட இந்திய சமூகத்தில் ஏழை கிராமப் புற குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவதை தடுக்கும் இந்த புதிய கல்விக் கொள்கை முற்றிலும் திரும்பப்பெறப்பட வேண்டும்.

தேர்விற்கான மாற்றுமுறை

இத்தகைய தேர்வுமுறை அல்லாத பள்ளியமைப்பு முறை உலகில் பல்வேறு நாடுகளில் உள்ளது. அங்கு தேர்வுமுறை க்கு மாற்றாக செயல்வழிக்கற்றல் முறை யும், திறனாய்வு மதிப்பீட்டு முறைகளும் நடைமுறையில் உள்ளன. இதுபோன்ற மதிப்பீட்டு மற்றும் திறனாய்வில் தரம் பிரித்தல் இல்லை. குழந்தைகளுக்கு என்ன தெரியும் என்பதில் தேர்வு இல்லை. மற்றவர்களுடன் ஒப்பீடு இல்லை மிக முக்கியமாக அர்த்தமற்ற மதிப்பெண் முறை இல்லை. இதுபோன்ற முறைகளில் குழந்தைகள் தன்னுடனேயே போட்டி போடுவர். தனக்கு முன்பே என்ன தெரி யும் என்பதுடன் ஒப்பிட்டு பார்த்து அதை விட நன்றாகச் செய்ய முயற்சிப்பார்கள். இந்த மதிப்பீட்டு முறையில் தோல்வி என்ற வார்த்தைக்கே இடமில்லை. குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் அந்தத் திறனை ஆய்வு செய்து கொள்ளலாம்.  கற்றல் கற்பித்தல் முறையில் இப்படி ஆரோக்கியமான, தேர்வுகள் இல்லாத,  பயம் இல்லாத, தோல்வி இல்லாத, மகிழ்ச்சி யான கற்றலை மேம்படுத்தும் முறையை ஏற்றுக்கொள்ளவோ பரிசீலிக்கவோ கஸ்தூரி ரங்கன்  குழு தயாராக இல்லை. இந்த புதியக் கல்விக்கொள்கை கல்வியை முழுமையாக வணிகமயப்படுத்துவதையும் மத்தியத்து வப்படுத்துவதையும், காவிமயமாக்குவதை யும் ஒற்றை பண்பாட்டை ஒற்றை கலாச்சா ரத்தை புகுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது கஸ்தூரிரங்கன் தலை மையிலான குழுவின் தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கை. இது முற்றிலும் திரும்பப்பெற வேண்டும். அதற்கான மக்கள் இயக்கங்கள் வலுப் பெற வேண்டும். 

கட்டுரையாளர் : இந்திய மாணவர் சங்க மாநில முன்னாள் செயலாளர்